-சு. கோபாலன்

Tiruchendur_murugan

 

 

 

 

 

 

 

 

 

சூரபத்மன் எனும் கொடிய அசுரனை வதம் செய்து உலகைக் காக்க
ஆறுமுகன் ஆறுநாட்கள் அவனுடன் சமர் செய்து ஆறாம் நாள்(சஷ்டி)
தருவாகி நின்ற அசுரனை தன் கூரிய வேலால் இரண்டாய்ப் பிளந்து
ஒருபாதி சேவலாய் மறுபாதி மயிலாய் அசுரனை மாற்றி அமைத்துக்
கருணை மிகு கந்தன் சேவலைக் கொடியாய் மயிலை வாகனமாய் ஏற்று,

அருளைப் பொழிந்து உலகைக் காத்தானே திருச்செந்தூர் திருத்தலத்திலே!
இந்திரன் மகிழ்ந்து மகள் தெய்வானையை ஏழாம்நாளன்று முருகனுக்கு
மந்திரம் வேதங்கள் முழங்க திருப்பரங்கிரியில் மணம் செய்வித்தானே!

கந்தனுக்கு உகந்த கந்த சஷ்டிப் புனித நாளில் அவன் ‘ஏழுபடை’
வீடுகளில் தரிசனம் செய்வோமே!

ஏழுபடை வீடு

படிதோறும் திருப்புகழ் அடி பாடியபடியே மலையேறி
வடிவேலன் அடி நாடி அடியவர் கூடிடுவர் திருத்தணி மலையிலே!

காவடி தோளில் சுமந்து கந்தன் நாமம் நாவில் சுமந்து அவன்
சேவடி பணிந்து சேவிக்க சேர்ந்திடுவர் பக்தர்கள் பழனி மலையிலே!

முடி இறக்கி நேர்த்திக்கடன் முறையுடன் செய்து முடித்த பின்னர்
முடிவிலா கடலில் முழுகி எழுந்து தொழுதிடுவர் திருச்செந்தூர் தலத்திலே!

பால்குடம் ஏந்திப் பக்திப் பரவசம் பொங்க எடுத்துச் சென்று
வேல் முருகனுக்கு அபிஷேகம் செய்து வணங்குவர் திருப்பரங்கிரியிலே!

தந்தை ஈசனுக்கே ஆசானாகிப் பிரணவம் உபதேசித்த
கந்தனை வணங்கி வளம் பெறுவரே சுவாமி மலையிலே!

அடிமலையில் அழகரைத் தரிசித்து மலையேறி முடிமலையில்
வடிவழகன் முருகனை வணங்கி மகிழ்வரே பழமுதிர்சோலையிலே!

பொன்னான இதயம் படைத்த சின்னப்ப தேவரின் பெரு முயற்சியால்
என்னப்பன் முருகனின் ஏழாவது படைவீடாக மிளிருதே மருத மலை!

கந்தா கடம்பா கார்த்திகேயா கலியுக வரதா
வடிவேலா வள்ளிமணாளா உந்தன் வரந்தா!        

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *