-செண்பக ஜெகதீசன்

அம்மாதான் தெய்வமென்றார்கள்
அருமைப் பிள்ளைகள்..

தெய்வத்துடன் வாழ
ஒருமகனும் விரும்பவில்லை-
மருமகள் விருப்பம்போல்..

வெளியூரில் வேலையென்பதால்
வசதிப்படாதாம்,
மூன்றுபேரும் போய்ப் பார்க்க
முதியோர் இல்லமும்
அருகில் இல்லையாம்..

அதனால்,
கோவில் தெய்வங்கள்போல்
அவளும்-
தனியாய் வீட்டில்…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *