[download id=”4g5ZPGf4Pdc7″]இறைவன்…

அன்பு எனும் மனம்
கொண்ட கண்களே
இறைவன்!

ஆக்கம் எனும் மனவலி(மை)
கொண்ட கண்களே
இறைவன்!

இரக்கம் எனும் இதயம்
கொண்ட கண்களே
இறைவன்!

ஈரம் எனும் உள்ஈர்ப்பு
கொண்ட கண்களே
இறைவன்!

உண்மை எனும் ஊக்கப்பண்பு
கொண்ட கண்களே
இறைவன்!

எளிமை எனும் ஏற்றம்
கொண்ட கண்களே
இறைவன்!

ஐயம் (சந்தேகம்) தவிர்ந்த உயர்அன்பு
கொண்ட கண்களே
இறைவன்!

ஒற்றுமை ஓங்கிய ஒ(பெ)ருமை
கொண்ட கண்களே
இறைவன்!!

— நாகினி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *