நாகினி

 

வாழ்த்தும் பண்பு
வானுயர்வு தரும் தெம்பு
வாய்க்கும் எழுத்தர்களுக்கு நல்லன்பு
வாசகர்கள் கொட்டும் கருத்தம்பு..

கருத்தாய் எழுதும் நடையிலே
கனிவுடன் வீரப்பாலூட்டும் செறிவிலே
கண்ணியம் மாறா கடமையிலே
கட்டுப்பட்டு வாழும் பொறுமையிலே..

உயர்வும் வளமும் பெறலாமே
உலகை என்றும் வெல்லலாமே
உவப்பாய் வாழ்வை இரசிக்கலாமே
உயர்ந்த மனிதனாய் உலவலாமே..

எழுதலாம் கலைநயத்துடன் புத்தகமே
விமர்சனமும் தரமான இலக்கியமே
தரணியை மாற்றும் வித்தகமே
எழுச்சியின் வரலாற்றுப் பெட்டகமே..

வாழ்த்தும் பண்பு
வானுயர்வு தரும் தெம்பு
வாய்க்கும் எழுத்தர்களுக்கு நல்லன்பு
வாசகர்கள் கொட்டும் கருத்தம்பு..!!

… நாகினி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *