வானமாய்…
-செண்பக ஜெகதீசன்
தினம் தினம் வரும்
தினகரனும்
மறைந்துவிடுகிறான் மாலையில்…
வளர்ந்து தேய்ந்து
வரும் நிலவும்
ஓடிவிடுகிறது காலையில்…
ஓட்டடையாய் ஒட்டிக்கொண்டு
பலமுகம் காட்டும்
மேகமும்
வேகமாய்ச் சென்றிடும் காற்றில்…
நிரந்தரமாய் நிற்பது,
வானம் மட்டும்தான்…
வாழ்க்கையில்,
வந்துபோகும் உறவுகளுக்கிடையில்
வானமாய்
மாறாமல் என்றும் நிலைப்பது,
தாய்மைதானே…!