-செண்பக ஜெகதீசன்

தினம் தினம் வரும்
தினகரனும்
மறைந்துவிடுகிறான் மாலையில்…          Beautiful-Sky

வளர்ந்து தேய்ந்து
வரும் நிலவும்
ஓடிவிடுகிறது காலையில்…

ஓட்டடையாய் ஒட்டிக்கொண்டு
பலமுகம் காட்டும்
மேகமும்
வேகமாய்ச் சென்றிடும் காற்றில்…

நிரந்தரமாய் நிற்பது,
வானம் மட்டும்தான்…

வாழ்க்கையில்,
வந்துபோகும் உறவுகளுக்கிடையில்
வானமாய்
மாறாமல் என்றும் நிலைப்பது,
தாய்மைதானே…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *