இசைக்கவி ரமணன்

 

[mixcloud]//http:www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%B0/?utm_source=widget&utm_medium=web&utm_campaign=base_links&utm_term=resource_link/[/mixcloud]

 

lord-shiva

நீ யாரோ ஏதும் அறியேனே
மனமெனும் பனியில் குலவிடும் கதிரே
மலையிலும் மனதிலும் மருவிடும் குளிரே
அருளே பரிவே அழகிய சிவனே! (நீ யாரோ)

அருகில் வருவதும் விரல்தொடும் நொடியினில்
விலகி விலகி நீ விரைவதும்
விண்ணை மீறி நீ விரிவதும்
உருகி உருகி நான் கரைவதும், உயிர்
பருகிப் பருகி நீ மகிழ்வதும்
அருவி பெருகுவதும் குருவி திணறுவதும்
அன்பு கொடுமையென மனது பதறுவதும்
நீ தலைவன் நான் அடிமை என்றே
நீயே நீயே கதி என்றே
ஆவியினுள்ளே தாவிடும் களியே
அள்ளிட வந்த என் அழகிய சிவனே!

ஆனந்தமே உன் ஓரியல்பா! என்
அன்பே அன்பே உன்வடிவா!
நானென தென்பதும் நடனங்களா! அவை
நடந்தடங்கும் அரங்கம் சுடலையிலா?
தானந்தம் இல்லாத ஜோதி, அது
நான்சொந்தம் என்றான தென்ன நீதி!

தேன்சிந்தும் வானந்தி மேனி
தான்தந்து தான்கொண்ட தேவி
ஊன் காண ஆனேறி வருமே
நான்காணும் என் அழகிய சிவனே

21.12.2014 / 7.45 / ஹைதராபாத்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *