நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…

0

கவிஞர் காவிரிமைந்தன்.

 

நல்லவர்க்கெல்லாம்

நல்லவர்க்கெல்லாம்…

இலக்கியம், கவிதை, கலை, ஓவியம் எனப் பன்முகம் காட்டிப் பரிணமித்தாலும் இதயம் ஒன்றி ரசிக்கும்தன்மையில்தான் அடிப்படையில் மேம்பட்டது எனத்தோன்றுகிறது. கடமைக்கு நன்றி சொல்வதைவிட உளமாற நன்றிசொல்வது உகந்தது அல்லவா? உள்ளத்தின் வெளிப்பாடு வார்த்தையில் வரும்போது சொற்கள் ஆகின்றன! அதுவே உணர்ச்சியின் வெளிப்பாடாய் கவிஞனிடம் பிறக்கும்போது கவிதைகளாய் மலர்கின்றன!

திரைப்பாடல்கள்கூட கவிதைகளாக மலரவைத்தவன் கண்ணதாசன் என்பதுதான் எத்தனை சத்தியம்!! இருபதாம் நூற்றாண்டில் – இவ்வுலகம் எத்தனையோ விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் தொழில்நுட்பத்துறை முன்னேற்றங்களால் வளர்ச்சியுற்று நவீன யுகத்தை நோக்கி வேகமான நகர்வு ஏற்பட்டிருந்தாலும் கூட..

இதே காலக்கட்டத்தில்.. இதோ கேட்கும் இதுபோன்ற இனிமையான பாடல்களும் படைக்கப்பட்டிருந்தது இதயத்திற்கான விருந்தல்லவா? காயப்பட்டிருக்கும் ஆயிரமாயிரம் மனங்களுக்கு மருந்தல்லவோ?

காலப்போக்கில் மனித வாழ்க்கை சுழற்சிமுறையில் வாட்டியெடுத்தபோதெல்லாம் வதங்கிப் போவது மனது மட்டுமே.. துவண்டுகிடக்கும் அந்த மனதைத் தொட்டு எழுப்பியபோது வார்த்தை வரவில்லையே!! விதியை எண்ணி விடையிறுப்போர் எண்ணிக்கைக் கூடுகிறதே! கண்ணதாசன் மட்டுமென்ன விதிவிலக்கா? கம்பனிடம் அவன் வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டும் விதமாக.. இதோ இப்பாடலில்.. ஒரு சில வரிகள் பளிச்சிடுகின்றன!

ஊழ்வினை உறுத்தல் என்கிற பதிகம் மனனம் ஆனதனால் இங்கே வரிகள் இப்படி ஜனனம் எனலாமா?

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

‘தியாகம்’ திரைப்படத்திற்காக கண்ணதாசன் – இளையராஜா – டி.எம்.எஸ். – லட்சுமி.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட்டணியில்..

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

கண்ணதாசனே.. படைப்பதனால் என் பெயர் இறைவன் என்று மார்தட்டிச் சொன்னவனே! மனித வாழ்க்கைக் கூறுகளில் எல்லாம் நிறைந்து தெய்வமாகவே எனக்குக் காட்சி தருபவனே! மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்!

http://youtu.be/zHJdgYyvGWA

காணொளி: http://www.youtube.com/watch?v=zHJdgYyvGWA

படம்:தியாகம்
பாடல்: கண்ணதாசன்
இசை : இளையராஜா
குரல்: டி. எம். சௌந்தர்ராஜன்

1234

நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *