மலர் சபா

மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

கடை கழி மகளிர் காலத்திற்கு ஏற்ற இன்பங்களில் ஈடுபடுதல்கார் காலம்

அங்ஙனம் படுக்கையில் இருக்கையில்
பூ வேலைப்பாடு அமைந்த சிவப்பு நிறப்பட்டை
இடையில் உடுத்திக்கொண்டு
அடர்ந்த கூந்தலில் வெண்மையான பாலைப்பூவைச் சூடி
சிறுமலையில் புதிதாய்ப் பூத்த                                 a_lonely_maiden_oq35-1
சிவந்த நறுந்தாளிப்பூவுடன்
நறுமணம் வீசும் புதிய குறிஞ்சிப்பூவைச் சூடி
குங்குமச் சாந்தைக் கொங்கையில் பூசி
செங்கொடு வேரியின் வளமான பூக்களால்
கட்டப்பட்ட மாலையுடன்
சிவந்த சுண்ணம் பூசிய மார்பில்
அழகிய பவளத்தால் ஆகிய அணிகலன் பூண்டு
மலைகளின் சிறகுகளைப் பிளந்த
வச்சிராயுதம் கொண்ட இந்திரனுக்கு
ஆர்ப்பரிக்கும் கடலிடத்தே
தம் செவ்வணியைக் காட்டுமாறு
கார்கால அரசன் தம் வாடைக்காற்றுடன் வரும்
காலம் அன்றியும்..

கூதிர்காலம்

சிற்ப நூல் சாத்திரம்
நன்கு கற்றறிந்தவர்களால் செய்யப்பட்ட
மேகம் தவழும் உயர்ந்த மாடங்களில்
அகில் ஆகிய விறகாலே
மடமை பொருந்திய மகளிர்
அத்தளத்தில் இட்ட தீயில்
குளிர்காய விரும்பி அமர்ந்து
நறுஞ்சாந்து பூசிய நம்பியருடன் கூடி
குறுகிய சாளரங்களை அடைக்கும் கூதிர்க்காலமும்…

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 98 – 101
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

படத்துக்கு நன்றி:
Google

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *