யாஅல்லாஹ்!
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
உள்ளத்து உணர்வினிலே- ஒருசிறு
ஏக்கப் பெருமூச்சுவரும் – அந்த
சுவாசக் காற்றிலே – நிழலாய்
நினைவுகள்வந்து நிழலாடும்- அந்தப்
பாசத்தை தடவியபடியே – தோழமைகள்
இதயத்தில் வந்தமரும் – அங்கே
நட்புத் துளியினாலே பாசம் –
மனதினை மகிழ்ச்சியாக்கும் !
அன்புத் தோழிகள் உறவும் – இப்படிச்
சொந்த மாகுமெனில்
என்னை உயர்வெனப் – படைத்தாய்
என்ன தகுதி யாஅல்லாஹ் ?
அன்பு உயிர் நாடி – என்பதாயின்
உயிரினில் இணைத்து விடு
மனமெல்லாம் நிறைந்திட – அன்புள்ளங்களை
இன்பமுறச் செய்திடுவேன்!