கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

உள்ளத்து உணர்வினிலே- ஒருசிறு
ஏக்கப் பெருமூச்சுவரும் – அந்த
சுவாசக்  காற்றிலே – நிழலாய்
நினைவுகள்வந்து நிழலாடும்- அந்தப்
பாசத்தை தடவியபடியே – தோழமைகள்
இதயத்தில் வந்தமரும்  – அங்கே
நட்புத் துளியினாலே பாசம் –
மனதினை மகிழ்ச்சியாக்கும் !

அன்புத் தோழிகள் உறவும்   – இப்படிச்
சொந்த மாகுமெனில்
என்னை உயர்வெனப் – படைத்தாய்
என்ன தகுதி யாஅல்லாஹ் ?
அன்பு உயிர் நாடி  –  என்பதாயின்
உயிரினில் இணைத்து விடு
மனமெல்லாம் நிறைந்திட   – அன்புள்ளங்களை
இன்பமுறச் செய்திடுவேன்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *