அம்பத்தூரில் இயல் இசை நாடக விழா
சித்திரை சிங்கர்
அம்பத்தூர் கந்தர்வகான சபா தனது 25வது ஆண்டு நிறைவு விழாவை கடந்த 26.01.2015 முதல் 01.02.2015 வரை சிறப்பாகக் கொண்டாடி அம்பத்தூர் நகர மக்களை மகிழ்ச்சிக் கடலில் நீந்த வைத்தது. இந்த கொண்டாட்டத்தை “இயல் இசை நாடக” விழாவாக அம்பத்தூர் ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா பள்ளியின் உள்ளரங்கில் நடைபெற்றது. முதல் 5 நாட்கள் இசை நிகழ்ச்சியாகவும் நிறைவு இரண்டு நாட்கள் அம்பத்தூர் நகர மக்களை மகிழ்விக்க இரண்டு நகைச்சுவை நாடகங்கள் இனிமையாக நடை பெற்றது. “கிரேஸி மோகன்” நாடகக் குழுவினரின் “சாக்லேட் கிருஷ்ணா” மற்றும் “மீசை ஆனாலும் மனைவி” இரண்டு நாடகங்களும் அம்பத்தூர் நகர மக்களை கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு சிரிப்பு அலையில் நீந்தச் செய்தது அனைவரும் கண்கண்ட உண்மை. சென்னை நகரின் புறநகர் பகுதியாக இருந்த அம்பத்தூர் நகரம் சென்னை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம் போன்ற ஆன்மீக / வியாபர நகரங்களுக்கு இணையாக .
சென்னை நகரின் புறநகர் பகுதியாக இருந்த அம்பத்தூர் நகரம் இப்போது சென்னை மாநகராட்சியுடன் இணைந்தது முதல் அனைவரும் விரும்பும் நகரமாக மாறி வருகிறது. இது போன்ற நிகழ்வுகள் இன்னும் அம்பத்தூர் நகருக்கு பெருமை சேர்க்கறது என்பது மகிழ்ச்சியான செய்தி. இத்தகு பெருமை சேர்க்கும் விதமாக அம்பத்தூர் கந்தர்வகான சபாவை சிறப்பாக செயல்பட துணையாக சபாவின் தலைவர் வள்ளல் ஜே.பி.திருநாவுக்கரசு அவர்களும் செயலாளர் DR.கே.சேஷாத்திரிநாதன் அவர்களும் இணை செயலாளர் தபேலா சுந்தர் மற்றும் பொருளாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களும் உறுதுணையாக இருந்து சாபாவை வளர்த்து வருகிறார்கள் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை. இவர்களனைவரையும் விட இந்த சபாவின் முழு வளர்ச்சிக்கு உறுதுணையாக, அம்பத்தூர் நகர முக்கிய பிரமுகர்களும், உள்ளூர் பத்திரிகைகளும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வமுடன் ஆதரவு தருவது இச்சாபாவிற்கு “கந்தர்வகான சபா” என்று பெயர் சூட்டிய “காஞ்சி பெரியவாளி”ன் ஆசிர்வாதமும் துணை நிற்கிறது என்பதையும் மறக்க – மறுக்க முடியவில்லை.
இந்த இயல் இசை நாடக விழாவில் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தைக் காண வல்லமை இதழின் ஆசிரியர் திருமதி.பவள சங்கரி அவர்கள் கிரேஸி மோகன் அவர்களின் சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டது நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தது மகிழ்ச்சிக்குரியதே.
BY சித்திரை சிங்கர்,
அம்பத்தூர்
கைபேசி இலக்கம்
9789778442
03.02.2015