-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

புதுப்புது இலக்கிய வடிவம்
பொலிவுடன் பூமியில் படைப்போம்,
எது சரி; எது பிழை எனவே !
ஆய்ந்தொரு முடிவுனை எடுப்போம் !

இலக்கியவாதிகள்! (கவிஞர்கள்) மோதி
ஈன நிலைக் கடி கோலி
கலக்கிடும் போக்குகள் வேண்டாம்!
கை கோர்த் தொழுகுதல் வேண்டும்!

சுவைஞர் தம் மனப்பசி தீர
துயர் நிலை அடியோடு மாற
சமைத்திடுவோம் நவ கலைகள் !
சாதனைக் கிங்கில்லை  விலைகள் !

வீழ்ந்தவர் எழுந்திடும் வழிகள்
விளம்பிடும் கவியொடு கதைகள்
ஆழ்ந்த நல்அறிவினைப் பிழிந்து
ஆக்கிடுவோம் ஒன்று கலந்து !

எழுத்தினுக் கெதிர் முனையாக
இலக்கிய வாதியின் வாழ்க்கை !
பிழைபடும் இழிநிலை மாறிப்
பிழையற ஒழுகுதல் வேண்டும் !

வாழ்வோரு சிறு துளிஅரிய
வளர்கலை உலகினில் பெரிது !
பாழ்நிலை அகன்றிட உழைப்போம்
படைப் பாளிகள் கைகளைப் பிணைப்போம் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *