-கே.எஸ்.சுதாகர்

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

ரெலிவிஷனின் காலம் முடிந்து, ஐ-பாட் கொம்பியூட்டருடன் நேரம் கரைகின்றது. உள்ளங்கையில் உலகம் தெரிகின்றது.
கழிவு அகற்றும் கவுன்சில் வாகனம் வருகின்றது. அதை வைப்பதற்கும் எடுப்பதற்கும் மாத்திரம் முன்புறம் போவதுண்டு. எதிர் வீட்டிலிருந்து ஒருவன் புன்னகைக்கின்றான். இதுவரையும் அங்கே ஒரு பெண்ணைத்தான் கண்டிருக்கின்றேன்.
கடந்த டிசம்பரில் அந்த வீடு விற்பனைக்கு விடப்பட்டிருந்தது. இப்போது அடுத்த கிறிஸ்மஸ்.

அவனே என்னை நோக்கி வருகின்றான்.

அவன்!

என்னுடன் வேலை செய்யும் சக நண்பன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *