— சரஸ்வதி ராசேந்திரன்.
(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

 

malaysia airline‘’இது ரொம்ப தப்பு ஆறுமுகம், உன்னை நம்பிய மக்களை மோசம் பண்ணுவது நம்பிக்கைத் துரோகம், வேண்டாம்ப்பா‘’ என்றான் விஷால்.

மக்கள் கொண்டுவந்து கொட்டிய பணத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு வெளிநாட்டிற்கு ஓடிவிடும் நோக்கத்தோடு ஃபைனான்சியர் ஆறுமுகம் ஃப்ளைட்டில் பறந்தார் குடும்பத்தோடு. தவறு என்று தடுத்த நண்பனையும் சட்டை செய்யவில்லை.

அடுத்த நாள் பேப்பரில் செய்தி:
சென்னையிலிருந்து கிளம்பிய மலேசிய விமானத்தைக் காணவில்லை, அதிலிருந்த முன்னூறு பேர் என்ன ஆனார்களென்றே தெரியவில்லை.


 
 
 
 
 

படம் உதவி: http://www.malaysiaairlines.com/my/en.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““நம்பிக்கை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *