சி. ஜெயபாரதன், கனடா

jay

பூமியே நமக்கோர் சிறை !
வானிற் பயணம் தடுப்பது ஈர்ப்பு !
காணி நிலத்தில் கட்டி வாழும்
குடிசை நமக்குச் சிறை !
காலை மாலை நம்மைத்
தாலாட்டும்
நகரம் ஒரு பெருஞ் சிறை !
வாலிபத்தில் கண்மூடித்
தாலி கட்டிப்
போட்டது உன் கழுத்தில்
பொன்விலங்கு !
வீட்டுக் குடும்பம், பலர் வாழும்
கூட்டுக் குடும்பம்
மாட்டுக் கொட்டச் சிறைகள் !
அங்கே நீ
போட்டாய் எனக்குப்
பூவிலங்கு !
அஞ்சலி தேவிக்கு
கொஞ்சும் சலங்கை கட்டி
படாதிபதி
இடுவார் கால் விலங்கு !
சேயை உண்டாக்கி
தாயிக்குத்
தப்ப முடியாத
நித்தியப் பாச விலங்கு !

ஆத்மாவுக்கு
தோல் உடம்பு போடும்
ஆயுள் விலங்கு !
உன்னுடைய
சிறைக் கைதி நானா ?
என்னுடைய
சிறைக் கைதி நீயா ?
சதி பதியை எக்காலமும்
சிறையில் பூட்டி
சாவியை வீசி எறிந்து
பல்லாங் குழி ஆடிவரும்
பொல்லாத விதி !

+++++++++++

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *