நாகினி

pon3

நேர்படப் பேசி
நேர்படச் செயலாற்றி
நேர்பட நடந்தால்
நேர்படமாகும் நித்தியவாழ்க்கை

கூர் புத்தியைக்
கூர் நல்நூலால்
கூர் ஆழ்படிப்பால்
கூர் வழிநடத்தலே உயர்வாழ்க்கை

பார் விளக்கும் பண்பை
பார் போற்றும் தெம்பை
பார் வணங்கும் நல்லோரைப்
பார் தொழப்பற்றுதலே அருள்வாழ்க்கை

நாள் கோள் தாள் ஒன்றும் குறைதரா
கோள் மூட்டும் தீப்பண்பே
நாள் முழுதும் துயர்தரும்
தாள் எனவுணர்தலே சத்தியவாழ்க்கை..!!

… நாகினி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *