-ஆர். எஸ். கலா

காதல் இது காதல் இது
கன்னி கொண்ட காதல் இது!
காத்திருக்கச் சொல்லி விட்டு
போன மன்னன் எங்கே?

தூது சென்ற வெண் புறாவும்                          enthizhai
துணையோடு வந்து நிற்க
தூது விட்ட பெண் மனமோ
ஏக்கம் கொண்டது இங்கே!

கதவையும் திறந்து வைத்து
கன்னி மனசையும் திறந்து
வைத்தேன்!

பொன்னின் செல்வன்
போனது எங்கோ
பொன்னான உன் பாதம்
படுவது எப்போ?

பாச வலை விரித்து
என்னைப் பிடித்தவரே
பாசாங்கான பாசம்
காட்டி என்னைப் பதற
விட்டவரே!

நான்கு பக்கமும் சுவர்
அடைப்பு நடுவிலே நான்
அமர்ந்திருக்க
நாலு பக்கமும் சுத்துதையா
என் மூச்சுக்காற்று உன்
பேச்சைத் தேடி!

மஞ்சள் வெயிலும்
மாலையாகிப் போனதையா
மஞ்சள் முகமும் வாட்டம்
காட்டுதையா!

நீதான்  தஞ்சம் என்று
என் நெஞ்சில் உன்
நினைவை விதைத்தேன்
நீதான் என் உலகம்
என்று கனவில் மிதந்தேன்!

போகாதே  போகாதே என்
உள்ளத்தைக் கொல்லாதே
உணர்வை  வதைக்காதே
போதும்  போதும்  உன்
விளையாட்டு என் எதிரே
வந்து நில்லு என் உயிரே!

 படத்துக்கு நன்றி: fineartamerica.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *