லிமரைக்கூ கவிதைகள்!
-ஆர். எஸ். கலா
கை நிறையப் பணம்
கடந்த கால வாழ்வை மறந்து
விட்டது அவன் மனம்!
நாட்டாமை வயிறு தொந்தி
அவர் பயணம் செய்வதோ இரட்டை
குதிரை பூட்டிய வண்டி!
மனைவி தயங்கியே கடையில்
கடன் கேட்கிறாள் கணவனோ மதுவில்
மயங்கியபடி பாதையில்!
முட்களின் நடுவில் ரோஜா
அதைக் கரம்கொண்டு பறித்துக்
கொடுத்தார் ராணிக்கு ராஜா!