பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.
மங்கலமாய் பலர் காதில் தினம் ஒலிக்கும் மந்திரம்!
ஆண்டவனின் சன்னதியில் நாம் கேட்கும் ஒலிநயம்!
புண்ணியங்கள் வேண்டுமென்பார் புனித ஒலிகேட்பதற்கு!
பாவங்களும் அகலுதென்பார் அந்த ஒலி கேட்கும்போது!
தேவன்கோவில் ஓசையது செப்பும் மொழி அற்புதமே!
நல்லவை எல்லாம் நாளும் நானிலம் பெறுகவே!
வாழ்வினில் எதிர்நோக்கும் வளங்களும் வருகவே!!
இன்பமாய் மனதில் நிலைக்கும் அமைதியும் பெறுகவே!!
இயக்குனர் பி.மாதவன் அவர்கள் இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராய் பலகாலம் பணிபுரிந்தவர். முதன் முதலாய் தானே இயக்கம் செய்து ஒரு படம் செய்ய இருப்பதை முன்னிட்டு கவியரசர்கண்ணதாசன்அவர்களைஅழைத்து இப்படத்திற்கு பாடல் எழுத பணித்தபோது .. முழுக்கதையையும் கேட்டுவிட்டு கவிஞர் எழுதித்தந்த பாடல்.. தேவன் கோவில் மணி ஓசை.. நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை.. பாவிகள்மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணியோசை .. இந்த வரி எனக்கு கவியரசின் உயரத்தை விஸ்வரூபமாய் காட்டியது. திரைப்படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கண்ணதாசனைக் கேட்டபோது அவர் இட்டபெயரும் “மணி ஓசை” தானே!!
உம்தமிழ் ஓசையதிலே உயிர்நலம் கூடவுண்டு..
உலகத்தின் முழுமைக்கும் உச்சரிக்கும் வார்த்தையுண்டு!
நல்லவை யாவுமே நமக்கென கொள்ள வேண்டி
நாளுமே கவிதையாக்கும் நற்றமிழ் தூரிகை நீயோ!
மங்கலமாய் பலர் காதில் தினம் ஒலிக்கும் மந்திரம்!
ஆண்டவனின் சன்னதியில் நாம் கேட்கும் ஒலிநயம்!
புண்ணியங்கள் வேண்டுமென்பார் புனித ஒலிகேட்பதற்கு!
பாவங்களும் அகலுதென்பார் அந்த ஒலி கேட்கும்போது!
தேவன்கோவில் ஓசையது செப்பும் மொழி அற்புதமே!
நல்லவை எல்லாம் நாளும் நானிலம் பெறுகவே!
வாழ்வினில் எதிர்நோக்கும் வளங்களும் வருகவே!!
இன்பமாய் மனதில் நிலைக்கும் அமைதியும் பெறுகவே!!
இயக்குனர் பி.மாதவன் அவர்கள் இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராய் பலகாலம் பணிபுரிந்தவர். முதன் முதலாய் தானே இயக்கம் செய்து ஒரு படம் செய்ய இருப்பதை முன்னிட்டு கவியரசர்கண்ணதாசன்அவர்களைஅழைத்து இப்படத்திற்கு பாடல் எழுத பணித்தபோது .. முழுக்கதையையும் கேட்டுவிட்டு கவிஞர் எழுதித்தந்த பாடல்.. தேவன் கோவில் மணி ஓசை.. நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை.. பாவிகள்மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணியோசை .. இந்த வரி எனக்கு கவியரசின் உயரத்தை விஸ்வரூபமாய் காட்டியது. திரைப்படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கண்ணதாசனைக் கேட்டபோது அவர் இட்டபெயரும் “மணி ஓசை” தானே!!
உம்தமிழ் ஓசையதிலே உயிர்நலம் கூடவுண்டு..
உலகத்தின் முழுமைக்கும் உச்சரிக்கும் வார்த்தையுண்டு!
நல்லவை யாவுமே நமக்கென கொள்ள வேண்டி
நாளுமே கவிதையாக்கும் நற்றமிழ் தூரிகை நீயோ!
வாழ்த்துகளுடன்..
காவிரிமைந்தன்