— கே.எஸ்.சுதாகர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

 

logoகனகமணி ஆசிரியர். பெண்ணிய கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர்.

கணவர் வீட்டு வேலைகள் செய்வதற்காக மலையகத்திலிருந்து ஒரு பெண்ணைக் கூட்டி வந்தார். கனகமணி இல்லாத சமயங்களில் அவர் அவளுடன் சில்மிஷம் புரிந்தார்.

“அம்மாவிடம் சொல்வேன்” என்பாள். வேலை பறிபோய்விடும் என்பதால் சொல்லுவதில்லை.

எல்லை மீறியபோது ஒருநாள் போட்டுடைத்தாள்.

“இஞ்சை வரும் போது என்னிடம் கேட்டுவிட்டா வந்தாய்? நீயும் அவரும் பட்டது பாடு” என்றாள் கனகமணி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *