-திருக்குவளை மீ.லதா

உடைக்கப்பட்டன
பெண்கையில்  விலங்கென்று
பெருமை கொள்பவனே உடைத்தும் எதற்கு
உன்னிடம் சாவி?
உனக்குப் பின்னால்
பெண் என்பதாலோ?
உன்னைவிட எதில் குறைந்தவள்?
அன்பும் பண்பும் அங்கத்தில் அவள் பூட்டியுள்ள
நகையல்லவோ!
விட்டுகொடுத்து வாழ்பவள்-
ஆனால் விட்டுதரமாட்டாள்
அவள் உரிமைகளை!
பூவானவள்
வாடும்வரை வாழ வைக்கிறாள் தன்னை நம்பினோர் கைவிடப்படாரென!
புதையும் வரைப் புரட்சிப்பெண்ணாக இரு பூவையே!
மடிந்து விடாதே மண்ணுக்குள் உரமாக!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *