– சந்திரகுமார விக்ரமரத்ன

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

 Untitled 12(113)

வாசலருகே மலர்ச்செடியின்

பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே

கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ

அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு

பாடப்படப்போகும் போதனை கீதங்களை

கொழும்புக்குச் சென்று

அப்பாவிடம் உரைப்பீரோ

 

அமாவாசைக் கனவுகள் வந்து

தம்பியை அச்சுறுத்துகையில்

நள்ளிரவில் தாலாட்டுக் கவிகள் பாட

யாருமில்லை வீட்டில் இப்பொழுது

இன்றிரவு சொந்தங்கள்

எம் குடிசையில் விழித்திருப்பர்

எவ்வாறிருக்குமோ நாளை

நாம் உணரும் அந்தகார இருள்

 

வண்ணத்துப் பூச்சிகளே

மெதுமெதுவாக

மறைந்துகொண்டிருக்கிறான் சூரியன்

இனி

பாழடைந்த வெண்ணிலவின் உச்சியில்

உறைந்துவிடும் அம்மாவின் வாசனை

அனைத்தும் வீழ்ந்தழிவதற்கு முன்பு

மயானத்துக்கு வந்து நாளை

கூட்டிச் செல்லுங்கள் அப்பா

சிறைச்சாலைக்கு எம்மையும்

 

– சந்திரகுமார விக்ரமரத்ன

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *