-பா வானதி வேதா. இலங்காதிலகம்

நயம் ஒன்றே விரும்பும் மனம்
யெயம் காணத் துடிக்கும் தினம்
பயமற்ற தன்னம்பிக்கைத் தூணெனும் மனம்
சுயமழியாது காக்கும் தனம்!

இன்ப மேகங்கள் சுகமான சுமையாய்
அன்பின் இராகமாய் புது அனுராகமாய்
இன்னிதழ்களின் எழில்மிகு நடனத்தில்
மென்னகைப்பது கண்களில் நிதரிசனம்!

வினைமனத் தினப்போரின் வில்லங்கப்
பிணைதலில் விதி யென்று கூறிடும்
புனையால் மனம் இறுகிடும்; இளகிய
நினைவு இன்பம் சேர்ப்பதியல்பு!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *