-ரா.பார்த்தசாரதி

மலையிலிருந்து நதிகள்  பல  பிறக்கின்றன
நதிகளை  அன்னைக்கு  நிகர்  எனச் சொல்கிறோம்!
நன்முறையில் அணை போடுவது நல்லதே
கழிவுநீரைக் கலக்குவது என்றும் தீமையானதே!

வாழும் உயிரினம்  வாழா  வேண்டுமே
நீரைக் குடிபவர்களுக்கும் கேடு விளையுமே
பயிர்களை  அழிப்பதா? மக்கள்நலம்கெட வைப்பதா?
தெரிந்தும்  தண்ணீரை அசுத்தபடுத்துவதா?

இன்று நதி நீரை மனசாட்சியின்றி களங்கப்படுத்துகிறோம்
தூய்மை  என்பது  தாய்மையின்  வடிவமே!
தாய்மை  என்னும் தூய்மை  காக்கப்படவேண்டுமே
இதனை நன்முறையில் அரசாங்கமே  நிறைவேற்றவேண்டுமே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *