வாழ்வது ஒரு சாண் வயிற்றுக்கே!

0

-துஷ்யந்தி, இலங்கை

வாழ்க்கைச் சக்கரம் இயங்க
வழிகாட்டியும் இதுவே…
வாழ்க்கைச் சக்கரத்தை முடிக்க
குழி தோண்டுவதும் இதுவே..!

அளவாய் உணவு கொடுக்க
உண்டு தினம் இன்பம்…
அளவுக்கதிமானால் தரும்
நமக்கே வீண் சோகம்..!

வறுமையின் நிறந்தனைக்
காட்டுவதும் இதுவே…
வாழ்வில் பிறர்க்குச் சேவையெனச்
செய்யவேண்டியதும் இதற்கே..!

ஈயாது சேர்ப்பான் பெரு
வயிறு கொண்டு இருப்பான்…
இறப்பின் பின் அவனோ
இடமில்லாது திரிவான்…!

நாடாளும் மன்னனுக்கும்
ஒரே அளவு பசிதான்…
நாட்டின் சிறு சேவகனுக்கும்
அதே அளவு பசிதான்..!

வீணான எண்ணம் கொண்ட
மனிதனுக்கே பிரிவினை…
பசியென்று வந்துவிட்டால்
வயிற்றுக்கில்லை வேற்றுமை…!

வாழ்க்கையில் உண்மைகள்
பலவுண்டு கேளுங்கள்….
வாழும்வரை நாமெல்லாம்
செய்யவேண்டும் பல சேவைகள்..!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *