-பா.ராஜசேகர்

இரவுப்பெண் 
தலை சூடிய
மலரோ 
அது நிலவு !

வளர்மங்கை 
மனம் தேடிய 
மலரும் 
வனம் தினம் 
தேடிவரும் வண்டோ                             
அது நான் !

கண் மீனது                                                            younggirl
பெண் மானது 
வெண் மேகங்களும் 
தலை சாயும் 
அவள் தேகம் !

மலர் மொய்க்கும் 
வண்டுகளைப் போல 
ஊர் கூடிவரும் 
நீ மலர்சூடி
வரும்போது !

மழை 
நீர் அருவி 
மலை மேலிருந்து 
தென்றலிடை 
வளைந்து நீ வரும் 
அழகில் நாணும் !

உன் 
முன்னழகு 
என் கண்களிலே 
பூமி பந்தை 
இரண்டு துடுண்டுகளாக 
வெட்டி ஓட்டும் !

உன் 
கட்டழகில் ஒட்டிக்கொண்ட 
ஆடை தேனில் 
ஊறச் சுளை 
சுவைக்கும் !

காரிருளை 
ஓர் பின்னலில் 
ஊஞ்சல் 
உன் கூந்தல் !

உன் 
புன்னகையைச் 
சுருட்டி கூந்தல் 
முனையில் கட்டி 
நீ நடந்து 
வர அழகு!

கூந்தலாடும் 
அசைவும் 
கொள்ளை போகும் 
மனசு !
கொல்லுதடி வயசு!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *