உள்ளம் கொள்ளை போகுதே !
-பா.ராஜசேகர்
இரவுப்பெண்
தலை சூடிய
மலரோ
அது நிலவு !
வளர்மங்கை
மனம் தேடிய
மலரும்
வனம் தினம்
தேடிவரும் வண்டோ
அது நான் !
கண் மீனது
பெண் மானது
வெண் மேகங்களும்
தலை சாயும்
அவள் தேகம் !
மலர் மொய்க்கும்
வண்டுகளைப் போல
ஊர் கூடிவரும்
நீ மலர்சூடி
வரும்போது !
மழை
நீர் அருவி
மலை மேலிருந்து
தென்றலிடை
வளைந்து நீ வரும்
அழகில் நாணும் !
உன்
முன்னழகு
என் கண்களிலே
பூமி பந்தை
இரண்டு துடுண்டுகளாக
வெட்டி ஓட்டும் !
உன்
கட்டழகில் ஒட்டிக்கொண்ட
ஆடை தேனில்
ஊறச் சுளை
சுவைக்கும் !
காரிருளை
ஓர் பின்னலில்
ஊஞ்சல்
உன் கூந்தல் !
உன்
புன்னகையைச்
சுருட்டி கூந்தல்
முனையில் கட்டி
நீ நடந்து
வர அழகு!
கூந்தலாடும்
அசைவும்
கொள்ளை போகும்
மனசு !
கொல்லுதடி வயசு!!