மீ.விசுவநாதன்

aathisangarar

 

பிறப்பால் உயர்ந்தவன் என்று
பிறரின் நலத்தினை எண்ணித்shankaracharya
துறந்தான் ! அதன்வினை இன்றும்
துடிப்பாய் இயங்கிடச் செய்தான் !
மறப்பான் பிறர்குறை எல்லாம்
மலர்வான் அகத்திலே அன்பால் !
அறத்தான் , அறிவிலே ஞானி ,
அளவிலா நல்வினை செய்தோன் !

சுனைநீர் ஆத்மனைக் காண
சுகமாய் சூத்திரம் தந்தான் !
தனையோர் எளியனாய் வைத்தே
தனக்குள் எளியனைக் கண்டான் !
அனைவர் அறிவினைத் தூண்டி
அதர்ம வழியினை மாய்த்தான் !
நினைவில் இருத்திட வேண்டும்
நிறைந்தோன் “சங்கரர்” பேரை !
(இன்று 23.04.2014 ஸ்ரீ சங்கர ஜயந்தி தினம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *