-பா. ராஜசேகர்

நடை தளரும்
நரை மலரும்
முகச்சுருக்கம்
அழகாகும் !

கண்பார்வை
நினைவூட்டும்
கனிவு நெஞ்சம்
மெருகூட்டும் !

முகம் காணும்
வரிச்சுருக்கம்
அனுபவத்தின்
அழகுரைக்கும் !

தளர்ந்தநடை
கடந்துவந்த
பாதையதைத்
தெளிவாக்கும் !

ஒளியிழந்த
கண்கள் அல்ல
உலகை ரசித்த
பொக்கிசமே !

வெளித்தெரியும்
நாடி நரம்பு
ஓடி உழைத்த
அழகுரைக்கும்!

எட்டிப்பார்க்கும்
தோள் எலும்பு
சுமைசுமந்த
சுமைதாங்கி !

கடினப் பற்கள்
போனதெனக்
கவலையில்லை…
கனிவுச் சொற்கள்
வெளித்தள்ளும்
குணம் பாரு !

மனிதரிலே
மாணிக்கம்
முதுமையடா!

முதுமை கண்டால்
முகம் சுளிக்கும்
மனிதா!

உன் இளமை
நிலையில்லை
எண்ணிப்பாரு !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *