வள்ளுவ மாலை
-சுரேஜமீ
மானம்போய் வாழும் நிலைவேண்டார் மாந்தர்
மனமேகும் என்றும் திருக்குறளை – போகும்
நிலம்யாவும் சொல்லும் மறையொத்த நீதியும்
நேர்நின்று வெற்றி காண!
கூட்டல் அறிந்து போக்கும் கழித்தலும்
வேட்டல் பெருக்கி வாழ்தல் வகுக்கும்
யாத்தல் திருக்குறளைப் போற்றிட – வந்திடும்
சேர்த்தல் நிலைக்கும் மேல்!
தெய்வம் மறுத்தாலும் தேடின வந்திடுமே
செய்யும் வினையாவும் வள்ளுவம் ஏகிட
பெய்யும் மழையொப்பத் தானாய் வரும்நலம்
மெய்யிது காண்பீர் பணிந்து!
வையத்து நோயெலாம் உள்ளத்தின் பாவமாம்
எண்ணத்தில் போரிடும் தூயவை வென்றிட
ஏற்றத்தில் வைத்துத் திருக்குறள் பற்றிட
தோன்றும் புகழுடை வாழ்வு!
தர்மமும் தானமும் பற்றிட வாழ்வினில்
பெற்றவர் உற்றவர் நன்மையும் கண்டிடத்
தூயநற் சிந்தனை தூண்டிடும் நல்லதை
வள்ளுவம் வழிநின்று செய்!