-துஷ்யந்தி, இலங்கை

இதுவே உலகம்
பலருக்கு…
இதனால் துன்பம்
இருப்போர்க்கு!

இரவும் பகலும்
உழைத்திடுவோர்
உடலின் களைப்பைத்                                       liquor
தீர்ப்பதற்காய்
மதுவை நாடிப்போகின்றார்
அதிலே களைப்பை
தீர்க்கின்றார்!

உழைப்புமின்றித்
தொழிலுமின்றிப்
பொழுதைப் போக்கி
அலைவோரும்
மறக்காமல் போகின்றார்
மதுவுக்கடிமையாகின்றார்!

உடல் கெட்டு மனங்கெட்டு
நற்குணங்கள்
யாவும் கெட்டு
உற்றார் உறவினர்
அனைவரையும் இழந்து
தெருவிற்கு வருகிறார்!

கையிலே பணமின்றித்
தவிக்கும் தருணம்
கையிலே கிடைத்ததை
அடகு வைத்து விற்றுப்
பையை நிறைத்துத்
தண்ணீரில் கரைக்கிறார்!

எண்ணிலே எட்டாத
பொய்யெல்லாம்
கற்கின்றார்
மண்ணறை
காண்பதற்கு வழி
தோண்டிக் கொள்கிறார்!

மதிகெட்டுப் போவதும்
முறைதானோ?
மதுவால்,
குடிகெட்டுப் போவதும்
சரிதானோ?
வீணாய்
இறைத்திடும் பணத்தை
உங்கள் வாழ்வில்
இறைத்தால்
நன்மையல்லவா?

மதுக்கரங்களே
கேளுங்கள்!
தீயதெல்லாம்
சுட்டுப் பொசுக்குங்கள்!
இல்லத்தை
மதுரமாக்கிப் பாருங்கள்!
மதுவிலே இவை
கிடைத்ததா சொல்லுங்கள்!?

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மதுபானம்!

  1. மதுவரக்கன் 

    ///மண்ணறை
    காண்பதற்கு வழி
    தோண்டிக் கொள்கிறார்!

    மதிகெட்டுப் போவதும்
    முறைதானோ?
    மதுவால், 
    குடிகெட்டுப் போவதும்
    சரிதானோ? ///

    ஆணித்தரமான கேள்வி
    புதைபடப் போகும்
    பதிக்கு !

    கருத்து மிக்க கவிதை. பாராட்டுகள்.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *