வள்ளுவ மாலை
-சுரேஜமீ
எழுத்து முன்னாகி எண்ணம் மனமேகி
ஏற்றம் பெறவேண்டி ஏந்துவன் தாளேகிச்
சொல்லில் வடித்தெடுத்த வாழ்வுநெறி – வள்ளுவம்
செய்த திருக்குறள் கல்!
கற்றல் மெருகேற்றிக் காணும் அனைவரையும்
பெற்றல் சுகமென்று தன்னுயர் பண்பெய்த
உற்றதுணை யாகும் திருக்குறள் – வேண்டும்
உயர்வுக்குத் தூண்டும் நூல்!
நம்பிச் செயல்யாவும் நாயகன் காத்திடுவான்
நம்பிலார் செய்திடினும் நன்மையே நல்கிடுவான்
வம்பிலா நற்கருணை வையத்தை வாழ்விக்க
வள்ளுவம் உணர்த்தும் இதை!
எதுவரினும் தாளேகித் தானேகச் செய்திட்டால்
வந்திடுவான் நெஞ்சதனில் ஓரொளியாய் மெய்க்கடல்
சேர்பணி நின்றுத் திருக்குறள் – ஓதிடப்
போகும் துன்பம் அறி!
பிறப்பின் வருவது முன்னம் ஒருநிலை
பின்னேகும் ஒத்ததோர் கூட்டிட மற்றவை
போக்கித் தகும்நிலை கண்டிடத் – தெய்வத்
திருக்குறள் சொல்வழி செல்!