-கனவு திறவோன்

என் உடல் சலனமற்றுக்
கிடப்பது கண்டு
புதைத்து விடாதீர்கள்!
புதைப்பது எங்கள் குல வழக்கமல்ல!

எரித்து விடாதீர்கள்!
சடலத்தை எரிப்பது
என் மதக் கொள்கைக்கு முரணானது!

ஆற்றில் போட்டு விடாதீர்கள்!
சுற்றுச் சூழலைப்
பேணியவன் நான்
என் உடலால்
அது மாசு பட வேண்டாம்!

விட்டு வையுங்கள்…
கூடு மறந்த உயிர்
என்றேனும் ஒரு நாள் திரும்பும்…
அது
அவள் துரத்தியடிக்கும்
நாளாகக் கூட இருக்கலாம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *