எடுத்த செயலை எளிதாய் முடித்து
அடுத்த பயணத்தை அன்றே – தொடுத்திட
வாழவழி ஆக்கும் வழக்கத்தின் தூணாகும்
வேழமுகன் தம்பிக்கை வேல்!

படிக்கும் அறிவினால் பண்பை வளர்க்க
படியும் சினமாம் பகையை- கடிதினிலே
கூழாக்கிப் பேராசைக் கூட்டையும் வேரறுக்கும்
வேழமுகன் தம்பிக்கை வேல்!

பிறப்பாம் படைப்பு பிறவி பயனாம்
மறக்க இயலா மழலை – உறவதன்
தாழம்பூ வாசமொத்த தாளின் அழகன்றோ
வேழமுகன் தம்பிக்கை வேல்!

… நாகினி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *