-சி. ஜெயபாரதன், கனடா

அழகினைக் கண்டால், உளம்போய்
அடிமை ஆகுதடி !
நிழலினைப் போல, பின்னால்
நெருங்க ஆசையடி !                                                azhagin vilippu

கற்ற மறையெல்லாம் ஒருகணம்
காற்றில் பறக்குதடி !
ஒற்றரைப் போல ஒளிந்து
உளவச் செல்லுதடி !

சுற்றுப் புறமெல்லாம் மறந்து
சூனிய மாகுதடி !
சுற்றி வருகுதடி துணைக் கோளாய்
சுய உணர் விழந்தபடி !

பட்டப் பகலிலும் கனவுகள்
பளிச்சிடு மேயடி !
வட்டப் புள்ளி போல, மனம்
வலம் வருகுதடி !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *