புத்தனுக்குக் கேள்வி!
-இரா.சந்தோஷ் குமார்
நானும் புத்தனாகியிருப்பேன்
சித்தார்த்தா
என்ன செய்ய ?
போதி மரத்தை
வெட்டித்தான்
என் ஜனநாயகத்திலுள்ள
அந்த குடிசையின்
அடுப்பு எரிக்கப்படுகிறது!
போதிமரத்தை
வெட்டித்தான்
நான் உல்லாசப்பட்ட
அந்த விபசாரக் கட்டில்
செய்யப்பட்டிருக்கிறது!
நானும் புத்தனாகியிருப்பேன்
ஆனாலும் என்னைச்
சித்தார்த்தனாகக் கூட
விட்டுவைக்கவில்லை
இந்த நவீன உலகம்!
ஆமாம்…
ஆசையைத் துறக்கச் சொன்னாயாமே…?
எனக்கும்
தியானிக்க ஆசைதான்
இல்லையேல்
மரணிக்கக்கூட ஆசைதான்!
நான் ஆசையைத் துறந்தால்
இம்சைகள் அதிகமாகிவிடுமே!
என்ன செய்ய புத்தா ?
ஏய் சித்தார்த்தனே…
உண்மையைச் சொல்!
போதி மரத்திற்கு
ஆசைப்பட்டுதானே
நீயும் புத்தனாகினாய்?