ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 4

0

சி. ஜெயபாரதன்.

kahlil-gibran

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

பேராற்றல் பெறும் அமெரிக்கா

சங்கமம் அடையும் புத்துலகுக்கு
ஓர் ஆத்மா உண்டு !
உறுதியாய் அந்த ஆத்மாவுக்கு
ஒரு குரலும் உண்டு !
அமெரிக் காவின் குரல்
அகில தேசக் குரலாய்
அமைவது அவனி விதி !
அந்நாட்டுக் கலை, கலாச்சாரம்,
சந்ததிகள்
அந்நியர் ஈடுபாட்டால்
கறைபடும் நிறம் மாறி !
உன்னத யுரேசிய
ஆன்மாக் களின்
உண்மை அழகு
உருவாகி வருகிறது அதன்
கருவாகி !

அகில நாடுகள் தழுவும்
மகத்துவ
ஒருமைப் பாட்டுணர்வை
உருவாக்கும் !
பல்வேறு கலாச்சாரம்
பின்னிடும்
பன்னிறப் பேழை அது !
அந்த அந்த தேச மாந்தர்
மாறுபாடாய்ச்
சிரம்மேல் கொள்கிறார்
அவரவர் சமூகத்து
வரலாற்றுப் பழக்கத்தை !

அனைவரும் ஒருமித்து
நோக்குவது
அமெரிக்க மண்ணை
ஒரு பொதுத் தளமாய் ! ஆயினும்
பொதுவில்லாக்
கருணை உள்ளம்
உதிக்கிறது அங்கே
எதிர்பாராது !
அந்தப் பரம்பரையில்
படிப்படியாய்
விருத்தி யாகி
அனைவரையும் பிணைக்கும்
ஓரின உணர்ச்சி !
கலப்புக் கலாச்சாரமே
கவர்ந்து
உருவாகி வருகுது
அமெரிக்க ஐக்கியம்
பேராற்ற லோடு !

 

சுதந்திர மனிதர் நாம் !

சுதந்திர மனிதர்கள் நாம் !
கிழக்கையோ மேற்கையோ
தழுவியோர் அல்லர் !
எல்லைக் கோடுகள் நமது
இதயத்தில் இல்லை !
சிலுவை, பிறை நிலவை
வழிபடுவோர் இல்லை !
ஏசுவையோ புத்தரையோ
நேசிப்போர் இல்லை !
யூதர் மீதோ, இஸ்லாமியர் மீதோ
பேதமை இல்லை !
சுதந்திர மனிதர்கள் நாம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *