ரமலான் வருக! வருகவே!!
-கவிஞர் காவிரிமைந்தன்
உலகமெலாம் செழிக்கவேண்டி
உள்ளமெலாம் ஒளியையேந்தி
வான்பிறையின் வழித்தடத்தில்
வயிற்றுப்பசி தான் உணர்ந்து
மாதம் ஒரு முப்பது நாள்
மாண்புடனே நோன்பிருந்து
தன்னுயிர்போல் மண்ணுயிர்களெனும்
தத்துவத்தைத் தான் அறிந்து
இறையருளின் கருணையினால்
ஈகைக்குணம் நிறையக்கண்டு
ஒருமித்தக் கருத்தாலே
ஒன்றிவாழும் அனைவருக்கும்
உள்ளம்நிறை வாழ்த்துக்களை
உரித்தாக்கும் திருநாள் ரமலான் வருக! வருகவே!!