என்னோடுள்ளாய் எப்போதும்

 

ajay

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

கோடான கோடி ஆண்டுகளுக்கு

முன்பு புவிக்

கோளில் முதலில் எழுந்த

சூரிய உதயத்திலே

வீசிய வெண்கதிர்ப் பொறிகளில்

எடுத்து

என் வாழ்வுக்கு நீ

பின்புலம் ஆக்க வில்லையா ?

எவர் அறிந்திடுவார்

எவ்விதம் நான்

அன்றைய காலைப் பொழுதில்

அவதரித்தேன் என்று ?

மலர்ந்தும் மலராத

எந்த ஓர் வடிவத்தை எனக்களித்தாய்

என்று எட்டாமல் போகும்

என் அறிவுக்கு !

கால வரம்பில்லாத முதல்வனே !

நினைவைக் கடந்து

எனைப் புதுப்பித்து

வடிவமைத்து வருகிறாய்

யுக யுகமாய் !

என்னருகில் அமர்ந்து கொண்டு

என்னுடனே இருக்கிறாய்

எப்போதும் !

************

Original Source: A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mumbai : 400023

*********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *