கனவு திறவோன்

 

மணல் கொள்ளை

நதியை உலர்த்தி
லாரியில்
கடத்துகிறார்கள்
வழியெங்கும் வெள்ளம்

*

மழை

மேகத்தைச் சுமந்து
களைத்த
வானத்துக்கு
வியர்த்தது

*

அகல்

விளக்கைத் தேடி வந்து
விட்டில்கள் விழுவது
இயல்புதானே?
‘அகல்’ என்கிறாய்
எங்கே போவேன்?

*

அவன்

வாசிப்பதற்கு
வரமாக வாங்கி
வாசிக்காமல்
மறந்து விட்ட
சாபக்கவிதை

– கனவு திறவோன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *