கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”பூஜையின் வேளை புகுந்த மனக்கரடி
யோஜனை செய்யும்அ யோக்கியனே, -வாசனையாம்(பூர்வ வாசனைகள்)
எண்ணம் தொலைத்தந்த ஏகாந்தம் வாய்த்திட,
கண்ணன்கை கன்னக்கோல் காப்பு”….
”வாஸனாதி கர்மங்கள் பூசிமகிழ் பூர்வநெஞ்சே
தேசம்நூற் றெட்டுடைய தேவனை -யோசனையில்
வைத்து வழிபட்டுக் கைத்தலத்தால் கும்பிடப்
பொய்த்திடும்ஐம் பூதப் புதிர்”….
”போலெ’ன்(று) உவமை புகல முடியாது
மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று
சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா
எந்தனை கன்றாக ஏற்பு”….கிரேசி மோகன்….