-பா.ராஜசேகர்

தாயின் நோயும்
தங்கையின் பசியும்
என் கண்முன்
அவலம் அள்ளுவது வலித்தன்று…

மனிதம் மரத்துப்போனவனே!
உன் கழிவை நீக்க
குடித்த மதுவால்
தந்தை உயிரைக் குடித்ததும்
எங்கள் வாழ்வைக் கெடுத்ததும்
உனக்கெங்கே தெரியும்…?

மனிதம் மரத்துப்போனவனே!
நீ அழுக்கைக் களையக்
குளிக்கிறாய்
எங்கள் அடுப்பெரிய
அழுக்கிலே குளிக்கிறோம்!

மனிதம் மரத்துப்போனவனே!
உன் கழிவுகளில்
செல்கள் செத்து
மனமும் பித்துப்பிடித்து
நாடிநரம்புகள் தொலைந்தும்
தீண்டாமை மருந்துதெளிக்கிறாய்

மனிதம் மரத்துப்போனவனே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *