-பத்மநாபபுரம் அரவிந்தன் 

இரையுண்ணும் போதும்
நிம்மதியற்றுத்
தற்காப்புணர்வுடன்
எச்சமயமும் பறக்கத்                         crow1
தயாராய் இருக்கும்
காகம் போல மாறிவிட்டது
மனித வாழ்வும்…

யதார்த்த நிலை தொலைத்து
ஒரு பதட்டத்துடன்
நகர்கின்றன நாட்கள்…

நடிப்பைச் சதா கைக்கொண்டு
இயல்பைத் தொலைத்து
வாழ்ந்துதான் ஆக வேண்டியிருக்கிறது!

இதில் சற்றே ஏமாந்தால்
நொடியில் துளைத்து விடுகிறது
ஒரு தோட்டா!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *