டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (15-10-1931 – 27-7-2015)

0

-பா வானதி வேதா. இலங்காதிலகம்

இந்திய ஏவுகணை நாயகன், தமிழ்
இலக்கிய ஆர்வலன், பன்முக விஞ்ஞானி
இந்தியா வல்லரசாகக் கனவு கண்டார்                  kalam
இராமேஸ்வரத்தில் உதித்த முத்து கலாம்
இந்திய அறிவியல் நட்சத்திரம், வீணையும்
இசைக்கும் இசை ஆர்வலர் மரணமற்றவர்
மகத்துவர், மக்களின் ஜனாதிபதியானவருடல் மறைந்தது
மனிதருள் மாணிக்கத்திற்கு ஆத்ம அஞ்சலி!

பத்மபூஷன், பாரதரத்னா, ஆர்யபட்டா இன்னும்
பத்விபூஷன் என்று எண்ணற்ற விருதாளர்
படகுச் சொந்தக்காரர் மரைக்காயர் தந்தையார்
ஜைனுலாப்தீன் – ஆஷியம்மாவின் திருப்புதல்வன்
சைவ உணவுக்கார இசுலாமியர், உலகமறை
திருக்குறளின் அடியொற்றி நடந்த பிரம்மச்சாரி
திருவே அறிவென உலகோரை ஊக்கியவர்
நெருப்பின் சிறகுகளிவர் ஆங்கிலச் சுயசரிதை!

மாமேதை, கனவுகள் காணுங்களென்று நினைவாகினார்
மார்க்கம் காட்டி இளையோர் சிந்தனைகள்
தீர்க்கமாக, மாணவர் குழாமுடன் கலந்தவர்
பார் போற்றும் விஞ்ஞானி கவிஞருமாவார்
நாட்டுக்காகத் தனையீந்த நற் சிந்தனையாளர்
அறிவியல் தொழில் நுட்பத்தை நல்ல
நெறியோடு காதலித்த இந்தியத் துருவநட்சத்திரம்
அறிவால் அறிமுகம் அறிவுறுத்திய அறிஞன்!

சாந்தி!  சாந்தி!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *