சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன் …
— கவிஞர் காவிரிமைந்தன்.
சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன்…
முழுநிலாக்கோலம்போல் முகமிருக்க, மோகனராகத்தை மனம் படிக்க, கடற்கரை அலைகளும் மெட்டமைக்க, வருகின்ற பாடல் கதை சொல்கிறது! காற்றினிலே வரும் கீதம் என்கிறது! முத்துராமன், கவிதா ஜோடி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ஜெயச்சந்திரன் குழுவினரோடு பாடிய பாடல், இளையராஜாவின் இதமான இசை கவிதையைக் கைப்பிடித்து வருகிறது!
பஞ்சு அருணாசலம் அவர்களின் பாடலிது! இது அவரின் சொந்தப்படம் என்பதும் கூடுதல் தகவல்! நீரின்மேல் அமைந்திட்ட குடில்தன்னை மலர்கள் அலங்கரிக்க, ஓடமது , ஏதோ மது அருந்தியவனைப் போல் தள்ளாட, காதல் கிளிகள் இரண்டு மெளனகீதம் பாடுகின்றன, அசரீரீ போல் வருகின்ற குரல்கள், அருகே செல்லும் படகோட்டிகளுடையதாக, எழிலாய் படம்பிடித்து நாயக நாயகியின் பாவங்களை நயமாய் காட்டியிருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
புதிய தம்பதிகளின் இளமைப் பயணம் ஆரம்பமாகும்போது, இன்பத்திற்கு எல்லைகளேது? அதனைப் பிரதிபலிக்கும் வரிகள் வார்த்திருக்கும் பஞ்சு அருணாசலம் பாராட்டுக்குரியவராகிறார். 1978ல் வெளியான இப்படமும் குறிப்பாக இப்பாடலும் வானொலி நேயர்களின் விருப்பமாய் நெடுநாள் தொடர்ந்தது, நீண்ட நெடிய பட்டியலாக…
மையை இட்ட கண்ணாலே
மையல் தந்த நேரம்
முதல்முதலா தொட்டேனே
வாய்க்காக்கரை ஓரம்
சாயாமல் சாய்ந்தாலே மார்பிலே …
அள்ளிக்கட்டும் கண்டாங்கி
அரைகுறையா ஒதுங்க
அலுங்காம அணைச்சாளே
வெதுவெதுப்பா மயங்க
மஞ்சள் கண்ட கைகாரி
மயக்கிவிட்டா என்னை …
திரைப்படம்: காற்றினிலே வரும் கீதம்
பாடல்: கவிஞர் பஞ்சு அருணாசலம்
இசை :இளையராஜா
பாடியவர் : ஜெயச்சந்திரன் குழுவினர்
காணொளி: https://www.youtube.com/watch?v=Bk4R0ZfkRwg
சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன்…
தையரத்தைய்யா தையரத்தைய்யா
தையரத்தைய்யா தையரத்தைய்யா
சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
குய்ய இலவாலி தண்ணு நிலவாலம்
தையரத்தய்யா தையரத்தைய்யா
தையரத்தையா தையரத்தய்யா
( சித்திரச் செவ்வானம்)
மையை இட்ட கண்ணாலே மையல் தந்த நேரம்
முதல்முதலா தொட்டேனே வாய்க்காக்கரை ஓரம்
சாயாமல் சாய்ந்தாலே மார்பிலே
அள்ளிக்கட்டும் கண்டாங்கி அரைகுறையா ஒதுங்க
அலுங்காம அணைச்சாளே வெதுவெதுப்பா மயங்க
மஞ்சள் கண்ட கைகாரி
மயக்கிவிட்டா என்னை
ஏகுய்ய இலவாலி தண்ணு நிலவாலம்
தையரத்தைய்யா தையரத்தய்யா
(சித்திரச் செவ்வானம்)
போய்வரவா என்றாலே ஏக்கத்துடன் பார்ப்பா
நான் திரும்பி வரும்வரையில் கரையினில் நிப்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்
என் முகத்தைப்பார்த்ததுமே துள்ளித்துள்ளி வருவா
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளித்தருவா
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத்தங்கம் போலே
ஏகுய்ய இலவாலி தண்ணு நிலவாலம்
தையரத்தைய்யா தையரத்தைய்யா
(சித்திரச் செவ்வானம்.)
https://www.youtube.com/watch?v=Bk4R0ZfkRwg
ஆரம்பத்தின் குழலங்காரம் ராஜாவின் நோட்சை காட்டிவிடும்
தாள்நடைகளும் வேறுபடும்
ஏகுய்ய இலவாலி தண்ணு நிலவாலம் …..மலையாளமா ?
குறிய இடையாளின் தண்டைநிலமாடும் என்றுதான் நினைத்திருந்தேன்