images (2)
“சொந்தப்பாக்(கு) ஆரணம் தந்தப்பா தென்பழனி
கந்தப்பா சோணை கிரிநாதர் -சந்தப்பா ,
என்தப்பா வெண்பா எழுத்தில் தளைதட்டல் !
குந்தப்பா என்நாவுக் குள்”….கிரேசி மோகன்….

ஆரணம் -வேதம்….

அறுபடையோன் புகழ்….
——————————————
திருவேரகம்(சுவாமி மலை)….
————————————-
”குந்திக்கால் மண்டியிட்டு கூப்பியக் கைகொண்ட
தந்தைக்கு சொன்ன தனயனை -சிந்தைக்குள்
வேராக ஊன்றி விருட்ஷமாய் நட்டிடு
ஏரகச் செல்வனை ஏத்து’’….(1)

பழமுதிர்சோலை
——————–
”கூப்பாடு போட்டவுடன் கும்பல் கூடிடும்
தோப்பாய் இருந்து தனிமரமாய் -மூப்பால்
கிழமுதிரும் போதேனும் கந்தன்கை கோர்க்க
பழமுதிர் சோலைக்குள் புகு’’….(2)

திருத்தணி
————–
”விருத்தனாய் வந்து குறத்தியைக் கூடி
திருத்தணி மேவும் தலைவா -மருத்துவன்
வைதீஸ் வரன்பெற்ற வேலா யுதாவாழ்வில்
பொய்தீசல் சேராது போக்கு’’….(3)

திருச்செந்தூர்
——————-
”மாறுபடு சூரனுடல் வேறுபட வேலெய்து
கூறுபட வைத்த குருநாதா -சீறுகடல்
செந்தூரில் பத்தினிகள் சேர வளர்ந்திடும்
சிந்தூர வண்ணனைச் சேர்’’….(4)
பழனி
——–
”மாம்பழம் தந்தை மறுத்ததால் கோபித்து
தீம்பிழம் பாகி தவக்கோலம் -நாம்பழனி
குன்றினில் கண்டு களித்திட காட்சிதரும்
நின்றிடும் ஆண்டி நமக்கு”….(5)

திருப்பரங்குன்றம்
———————–
’’குரங்கென்ற நெஞ்சோடு கூடிக் குலாவி
தரங்குன்றி தாழ்ந்தோம், தவித்தோம் -பரங்குன்றில்
தெய்வானை கைப்பிடித்த தேவ சகாயனை
கைவாய்மெய் கொண்டு கருது’’….(6)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *