-சுரேஜமீ

வேலையும் நல்ல வேளையும் கூடிவரும்
மேலவன் தானெழுதி வையகம் தந்திட்டத்
தூயநூல் வள்ளுவம் பற்றிடக் காண்பீர்                valluvar
மெய்யென வாழும் உலகு!

எதுவரின் வந்தது நல்லவை நிற்கும்
கொடுசெய் நீக்கும் திருக்குறள் வல்லமை
தானறிவர் அவ்வழிசெல் ஆன்றோர் மற்றார்
தான்தேடித் தாள்பணி வர்!

தெளிவுநற் சிந்தனைக்குத் தேடுதினம் வள்ளுவம்
சேர்க்கும் அறிவுடை நெஞ்சம் சிறந்திடும்
வாழ்வும் போற்றிநல் மூத்தோர் விளங்கச்
செய்திடும் நன்னூல் குறள்!

தன்வலி தானறிய மாற்றான் வலியுணரத்
தேற்றிடும் வாழ்வைத் திருக்குறள் சேயுயிர்த்தாய்
போல அணைக்கும் மந்திரம் சொல்லப்
பொசுக்கும் துன்பம் அழித்து!

பல்லுயிர் பேணும் மனதில் தெய்வமும்
தங்கித் தடைகளை ஓட்டித் திருக்குறள்
ஓதும் பழக்கத்தைக் காட்டித் தினமும்
ஒற்றுமை ஓங்கிடக் காண்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *