-கவிஜி 

இரண்டாவது கோடரி
தங்கத்தில் கிடைத்த பின்னும்,
இல்லை என்றவன்
மூன்றாவதாகத் தன்
கோடரியோடு மற்ற இரண்டும்
கிடைத்த போதும்
கோடரிகளே எனதில்லை
என்று வேகமாய்த்
திரும்பினான்…

தலை வணங்கி நின்றன
மரங்கள்,
தேவதை அதுவல்ல…
இவன்தான் என்று!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *