இரண்டாவது கோடரி
தங்கத்தில் கிடைத்த பின்னும்,
இல்லை என்றவன்
மூன்றாவதாகத் தன்
கோடரியோடு மற்ற இரண்டும்
கிடைத்த போதும்
கோடரிகளே எனதில்லை
என்று வேகமாய்த்
திரும்பினான்…
தலை வணங்கி நின்றன
மரங்கள்,
தேவதை அதுவல்ல…
இவன்தான் என்று!
நான் கவிஜி.. (B.COM, MBA, DIP IN ADVERTISING.)
கோவையில் வசிக்கிறேன்…
கவிதை தேடுகிறேன்…. கதைகளாய் கிடைக்கிறேன்…..
காடும் தனிமையும் பிடித்த வாழ்வியல் எனது….
குறும்படங்கள், புகைப் படங்கள் எடுப்பது… பிடிக்கும்…….
வாழ்வை அதன் போக்கில் வாழ்பவன்….
தாஸ்தாவெஸ்கி யின் தீவிர வாசகன்…
“சே” வின் மிகப் பெரிய பற்றாளன்…
சக மனிதனை மதிப்பவன்….
மனிதம் வளர்த்தால் எதுவும் வளரும் அதில் இலக்கியமும் என்பவன்…
தொடர்ந்து என் படைப்புகளுக்கு அங்கீகாரம் தரும் வல்லமையில் இணைவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்….