-மீ.விசுவநாதன்

விடங்கொண்டாய் ! சுடலையில் உள்ள
-விபூதி உடல்கொண்டாய் ! நாகப்                       சங்கரலிங்கம் சுவாமி
படங்கண்டு கையிலே கொண்டாய்
-பச்சை வில்வத்தைச் சூடி!
இடங்கொண்ட பெண்ணுடன் இன்ப
-இச்சை கொண்டாடு கின்றாய் !
நடங்கொள்வாய் என்சிறு நெஞ்சின்
-“நான்நச் சழிப்பா”யென் சிவனே !

(அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், விளம், மா, மா,காய், மா)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *