-பா.ராஜசேகர்  

சுதந்திரம் எல்லோர்க்கும்
சமமென நினைத்திடு
சாதி சமயத்தால் பிரிப்பதை
இன்றோடு நிறுத்திடு !

எத்தனை தியாகங்கள்
செய்ததாலே வந்தது ?
சதையும் இரத்தமும்
கலந்த மண்ணு நினைத்திடு !

ஒன்றுபட்ட பாரதம்
உயர்வாகும் புறப்படு
உலக நாடுகளுக்கு
உணர்த்தவேணும் தோள்கொடு !

நீதி நியாயங்கள்

நிலைப்பதற்குக் குரல் கொடு
நீரை விலைகொடுக்கும்
நிலையை மாற்றப் போர்த்தொடு !

பணத்தாசையிலே நாட்டுக்குக்
கேடுசெய்வோரை நோக்கி வாளெடு
பதவி அதிகாரம் பழி சேர்க்கும்
கூட்டம் வேண்டாம் ஓட்டிடு!

பசியே இல்லாமை பாரதம்
பெறவேண்டும் பயிரிடு
சொர்க்கம் வேறில்லை பாரத
மண்ணேதான் உணர்ந்திடு !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *