செந்தாமரையே செந்தேனிதழே …
— கவிஞர் காவிரிமைந்தன்.
புகுந்தவீடு என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடிய பாடலிது! பாடலை இயற்றியவர் விசித்ரா.
பாடலின் பல்லவி முதலாக பற்றிக் கொள்கிற இனிமை, இறுதிவரை தொடர்கிறது. பாடிய குரல்கள் தரும் மயக்கத்தில் இப்பாடலைக் கேட்பவரும் மயக்கத்திற்கு அடிமையாகிறோம். அடிமனதை வருடுகின்ற சுகம்தருகிறார் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.
மெல்லிசை என்னும் சொல்லுக்குப் பொருள் சொல்லும் இன்னிசையிது என்று ரசிகர்கள் சத்தியம் செய்யலாம். தமிழ் மொழியின் இனிமையைப் பறைசாற்ற சான்று பகரும் தமிழ்த்திரையிசைப்பாடல்களில் இதுவும் ஒன்று! காதலர்களின் இதயப் பரிமாற்றம் நடைபெறும் நேரம் நலம் பாடும் வளமான சொற்கள் பரிமாறப்படுகின்றன. இன்பத்தின் உரையை எழுதிவைத்தாற்போல்… இதோ ஒரு காதல் பாடல் கவிதை மொழியாக்கப்பட்டுள்ளது.
திரைப்படம்: புகுந்த வீடு
பாடல்: செந்தாமரையே
பாடகர்கள்: ஏ. எம். ராஜா, ஜிக்கி
இசை: சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர்: விசித்திரா
ஆண்:
செந்தாமரையே செந்தேனிதழே
பெண்ணோவியமே கண்ணே வருக … கண்ணே வருக …
பெண்:
முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னவன் நீயோ
மல்லிகையின் நலம் மதுவண்டோ
[செந்தாமரையே]
ஆண்:
புகுந்த வீட்டின் புது வரவு
நீ பூத்துக் குலுங்கும் புது நினைவு
பெண்:
மங்கையின் வாழ்வில் ஒளி விளக்கு
அது மன்னவன் ஏற்றிய திரு விளக்கு
ஆண்:
இளமை தரும் மயக்கம்
பெண்:
இனிமை அதில் பிறக்கும்
[செந்தாமரையே]
பெண்:
நீலவானின் முழுநிலவே
உன்னை நெருங்கி மகிழும் என் மனமே
ஆண்:
ஆசை மனதின் தேனமுதே
உன்னை அருந்தத் துடிக்கும் என் உறவே
பெண்:
கொடுத்தேன் என்னைக் கொடுத்தேன்
ஆண்:
எடுத்தேன் அள்ளி எடுத்தேன்
[செந்தாமரையே]
காணொளி: https://youtu.be/ZIJgMsoGUu8