-தமிழ்நேசன் த. நாகராஜ்

உன்னை நினைத்து
நான் கடக்க…

சிலர் என்னையும்                                              Tamizh Annai
நினைத்தார்
அந்த நினைப்பில் நீயே – தாயே!

உன்னை  பற்றிப் பேச
நான் தகிக்க…

பலர் என்னையும்
பற்றிப் பேசினார்
அந்தப் பேச்சு நீயே – தாயே!

உன்னைச் சிறப்பு என்று
நான் துதிக்க…

சிலர் என்னையும்
சிறப்பு என்றார்
அந்தச் சிறப்பு நீயே – தாயே!

நீ தந்த வழித் தடத்தில்
நான் நடக்க…

எனது வாழ்க்கைத்
தடமேல்லாம் நீயே – தமிழ்த் தாயே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *